திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உணர்ச்சி......................எப்படி.....................

உணர்ச்சி......................எப்படி.....................:
உணர்ச்சி வசப்படுபவர் எப்படி இருப்பார்

கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு நிறைந்திருக்கும்.

தொட்டாலே சிணுங்குவார்கள்.



பொருமை இருக்காது.

அபரீமிதமான ஈகோ இருக்கும்.

உணர்ச்சி வசப்படாதவர் எப்படி இருப்பார்

யதார்த்தத்தை நேருக்குநேராகச் சந்திக்கும் தைரியம் இருக்கும்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கும்.

பொருமையுடன் காத்திருப்பார்கள்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருப்பார்கள் .

ஓவன் பயன்படுத்தும் கர்ப்பிணிகளே உங்கள் குழந்தைக்கு ஆபத்து.!!

ஓவன் பயன்படுத்தும் கர்ப்பிணிகளே உங்கள் குழந்தைக்கு ஆபத்து.!!:

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.


பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர். மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.


சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!:

ன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.
பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.
பூண்டு

'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை
பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கொள்ளு
ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
மிளகு
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சாம்பார் வெங்காயம்
சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கோடாம்புளி
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம் - அதிமதுரம்
தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
செம்பருத்தி,ரோஜா இதழ்கள்
செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி - ஏலக்காய்
இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? – அறிந்து கொள்ளுங்கள்!

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? – அறிந்து கொள்ளுங்கள்!:

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.நம் உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.


நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒருசில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.இன்னும் சில விஞ்ஞானிகள் நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம் களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.


நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.


தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.


மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் கலங்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.


அமெரிக்க விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.


மரபணு கண்டுபிடிப்பு


அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப் பெரிய ‘யூகலிப்டஸ்’ மரத்தின் மரபணு மூலக்கூறை தென் ஆபிரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 85 மீ.உயரமுள்ள இம்மரத்தின் மரபணு அமைப்பு மனித மரபணு மூலக்கூறில், ஐந்தில் ஒரு பங்கு நீளம் கொண்டது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் உள்ள ‘யூகலிப்டஸ்’ மரங்களின் மூலம் உயிரி எரிபொருள் ஆராய்ச்சி செய்ய முடியும்.


உலக மகா நடிப்புடா சாமி

உலக மகா நடிப்புடா சாமி:

வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் நடிகர்களின் நடிப்பை பார்த்து பிரமித்து வியந்து ரசித்திருக்கிறோம்.... ஆனால் அதையே உங்கள் பார்வையில் நேரில் பலர் நடித்துக்கொண்டிருக்கின்றனர் ... அதையும் தான் கொஞ்சம் ரசித்து(......) பார்ப்போமே...


நாடகமேடை இவ்வுலகம்
நடிகர்கள் நாம் அதில்

· நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.
·
· உருவ அமைப்பு, தோற்றம், அணிந்திருக்கும் உடைகள் குரல் ஒலியை வைத்து யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடுவார்கள். இதனால் நல்லவர்களையும், கெட்டவர்களாக நினைப்பார்கள். போவோர், வருவோரைப் பார்த்து புறம் பேசுவார்கள், தூற்றுவார்கள்.

· இரு கோஷ்டிகளுக்கும் இடையே குஷ்தி, சண்டை, கைகலப்பு, நடந்து இருக்காது. வாய்ப்பேச்சு அளவிலே மட்டும் தகராறு நடந்து இருக்கும். ஆனால் அடித்தார்கள் , உதைத்தார்கள், சித்ரவதை செய்து கொடுமை படுத்தினார்கள் என கூனியும் குறுகியும் உடம்பை வளைத்தும் நிமிர்த்தியும் நெளிந்தும் காண்பிப்பார்கள். குரல் ஒலியுலும் வெளிப்படுத்துவார்கள்.

· இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவர் அடி, உதை வாங்கி இருப்பார். ஆனால் கூனி, குறுகாமல் உடம்பை வளைத்து, நிமிர்த்தாமல் அடி உதை சித்ரவதைக்கு கொடுமைக்கு ஆளாகவில்லை என ஒன்றுமே நடக்காத மாதிரி பந்தா பண்ணுவார்கள்.

· கண்களால் பார்க்காததைப் பார்த்த்தாகவும், பார்த்ததைப் பார்க்கவே இல்லை, எனவும் தம் கண்களால் பிரதிபலித்துக் காட்டுவார்கள்.

· தம் வாயினால் சொல்லாததை, சொல்லியதாகவும், சொன்னதை சொல்லவே இல்லை என்றும் மறுப்பார்கள், வாக்கு வாதம் பண்ணுவார்கள்

· தம் காதுகளால் கேட்ட தை, கேட்கவே இல்லை என்றும் , கேட்காத்தை கேட்டேன் என்றும் சாதிப்பார்கள்.


· நடக்காத்தை நடந்த மாதிரியும், நடந்த்தை நடக்காத மாதிரியும் பாசாங்கு செய்வார்கள்.

· இல்லாத ஒன்றை இருப்பது போலவும் , இருக்கின்ற ஒன்றை இல்லாத்து போலவும் பிரமையை ஏற்படுத்துவார்கள்.

· தெரிந்த்தை தெரியாத்து போலவும், தெரியாத்தை போலவும் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்

· பொய்யை உண்மை போலவும், உண்மையைப் பொய் போலவும், பேசும் தோரணையிலே சாமர்த்தியமாக மறைப்பார்கள்; சமாளிப்பார்கள்; நிருபிக்க முயலுவார்கள்
நன்றி - ஆசிரியர் திரு.சுதர்சனா அவர்கள் (நடிப்பு கலை என்ற புத்தகத்திலிருந்து)
w
w
யார் எப்படி நாடகமாடுனா நமக்கென்ன நாம நார்மலா இருப்போம் சரி தான நண்பர்களே...

டிஸ்கி: என்ன நண்பர்களே சும்மா போறீங்க ஓட்டு பெட்டியில் நாலு ஊம குத்தா குத்திட்டுப்போங்க....

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே:


* திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்யமாட்டான். எவன் எப்பொழுதும் சந்தோஷத்துடனும், திருப்தியுடனும் இருக்கிறானோ, அவனே அனைவரையும் சந்தோஷத்துடன் இருக்கச் செய்வான்.
* நாக்கு பாவமான வார்த்தைகளைப் பேசுவதற்கு தயாராக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.



* சோம்பல் அனைத்து விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. "சோம்பேறி' என்ற சொல்லே அபத்தமானது. அப்படி ஒரு பெயரை வாங்கிவிடவே கூடாது. எப்பாடுபட்டாவது அதனை விட்டுவிட வேண்டும்.




* உலகம் என்பது தர்ம, அதர்மச் செயல்களுக்கான தேர்வு நடக்கும் இடம். மிகுந்த கவனத்துடன் தர்ம, அதர்மங்களைப் பரிசீலனை செய்து, நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.




* கெட்டவர்களின் சகவாசம் நரகம். சாதுக்களின் சகவாசம் சொர்க்கம்.




* சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை அறிந்தும், அதைக் கடைபிடிக்காதவன் பாவம் செய்தவனை விட கீழானவனாகிறான். எனவே, சாஸ்திரங்களின் கூறியபடி அதனை முறையாக கடைப்பிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.




* நாம் செய்யும் அனைத்து செயல்களும் முழுமைபெற செயல்களின் ஆதாரத்தில் தர்மம் இருக்க வேண்டும்.




* எப்போதும், எவரையும் துன்புறுத்த கூடாது, நல்லெண்ணத்துடனும், கெட்ட எண்ணத்துடனும் ஒரு பிராணியை கொடுமைப்படுத்த கூடாது.




* கூரையில்லாத வீட்டில் மழை தாரைகள் விழுவது போல யோசனையில்லாத மனிதனின் மனதில் விரோதிகள் புகுந்து விடுவார்கள், என்பதால் அனைத்து செயல்கள் செய்வதற்கு முன்பாக யோசனையுடன் செய்வது நல்லது.




* எதிரி கூட அதிக தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் கெட்ட வழியில் செல்லும் மனமோ அதைக் காட்டிலும் அதிக நஷ்டத்தை விளைவிக்கும் என்பதால் மனதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.




* வண்டு எப்படி பூக்களின் அழகையும், வாசனையையும் சேதப்படுத்தாமல் மதுவை எடுக்கிறதோ, அதுபோல் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.




* போரில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயிப்பவன், உண்மையில் வீரனல்ல. எவனொருவன் தன்னைத் தானே ஜெயிக்கிறானோ, அவன் தான் உண்மையான வீரனாவான்.




* பிறருக்கு உபதேசம் செய்பவன், அந்த உபதேசங்களுக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துவது என்பது கடினமான செயல்.




* உலகம் நீர்க்குமிழி மற்றும் கானல் நீர் போன்றது, இந்த உலகை துச்சமாக மதிப்பவனை இறப்பு தொடுவதில்லை. அதாவது, அவன் இறப்பை எதிர்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கிறான்.
* வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் ஏற்படும் போது, கோபத்தை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான சாரதியாவான். மற்றவர்கள் அனைவரும் கயிற்றைப் பிடிப்பவர்கள் தான்.




* அன்பின் மூலம் கோபத்தையும், நல்ல செயல்கள் மூலம் தீய செயல்களையும்,பொதுநலத்தால் சுயநலத்தையும், உண்மை மூலம் பொய்யையும்வெற்றிகொள்ள வேண்டும்.




* வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. எவன் அதிகமாகப் பேசுகிறானோ அவன் அதிகம் பொய் பேசுகிறான். வார்த்தைகளை எவ்வளவு குறைக்கமுடியுமோ, அவ்வளவு குறைத்துப் பேச வேண்டும்.






நன்றி


இதை கேப்பார் யாருங்கோ....?

இதை கேப்பார் யாருங்கோ....?:
பாட்டியிடம் சுட்ட பழமொழிகள்


அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பதே மேல்.

கடவுளிடம் கேட்டால் – கிடைக்காதது ஒன்றுமில்லை.


பக்தியோடு பிரார்த்தனை செய், ஆனால் சுத்தியலைப் பலமாய் அடி.


உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை பலன் தராது.

ஒருவன் கடவுளை நோக்கி நொண்டிச் செல்கிறான், ஒருவன் சைத்தானை நோக்கி குதித்தோடுகிறான்

தூய அன்பு அமைதிக்கு இருப்பிடம்.

தீயோர் நேசத்தை விட தனிமை மேலானது.

அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.

ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது.

கலைகளில் ஈடுபாடுடையவன் கவலைகளை மறக்கிறான்.



அறிவின் தந்தை ஞாபகசக்தி; அதன் தாய் சிந்தனை.

வதந்தி தந்தியை விட வேகமானது.

முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.

நீண்ட கால விரோதியை நம்பாதே.

இனிய முகம் உறவை வளர்க்கும்.

கெட்டிக்காரப் பெண் – தான் காதலிப்பவனை விட்டுவிட்டுத் தன்னைக் காதலிப்பவனைத் தான் மணப்பாள்.

பெண்ணில்லாத வீடு பேய் வாழும் இடம்.

தாயைப்பார்த்து மகளை மணம் செய்.

நூலைப் போல செலை, தாயைப் போல சேய்.



தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் ஒரு பெண்ணால், வீடானது பாழாகும்.

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்; அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்; விவாகம் மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்!


தாயை யாருடனும் ஒப்பிடலாகாது; அவள் ஒப்பற்றவள், ஆனால் அவள் நல்லவளாக – இருந்தால் மட்டுமே.

மகன் செத்தாலும் பரவாயில்லை-மருமகள் கொட்டம் அடங்கட்டும்.

பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள்.



டிஸ்கி: ஆஹா மறந்துட்டீங்களே! எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க

நண்பர்களே கண்டிப்பாக படியுங்கள்

நண்பர்களே கண்டிப்பாக படியுங்கள்:

தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாகஅமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே! இதை படியுங்கள்


ஒரேயொரு நாளில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இப் பதிவினைப் படித்து,
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள் வாயிலாக
இப் பதிவினைப் பகிர்ந்து, பல பேரிடம் இப் பதிவினை எடுத்துச் சென்றால்,
உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும், தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும்
மூன்று உறவுகளினதும் குடும்பத்தினருக்கு நாம் செய்கின்ற சிறு உதவியாக
இது அமைந்து கொள்ளும். பதிவர்களின் சகோதரன் நிருபன் அவர்களின் ......



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை
அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.
இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த
இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது.
புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள்
கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை,
குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

பதிவர்களின் நண்பர் செங்கோவியின்


----------------------------------------------------------------------------------------------------------------
பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.

சகோ ஹைதர் அலியின்...
------------------------------------------------------------------------------------------


இது எம் மக்கள் மூன்று பேருக்கு தூக்கில் இருந்து பிழைக்க வைக்க
தங்களின் அனுமதி வேண்டி நிற்கும் பல லட்சம் மக்களில்
ஒருவனால் எழுதப்படும் ஓர் கண்ணீர் கடிதம்....


விக்கியின் அகட விகடங்கள் .... மாம்ஸ் விக்கியின்


http://vikkiulagam.blogspot.com/2011/08/blog-post_8104.html


--------------------------------------------------------------------------------------

கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே


நமது புலவர் ஐயாவின்

----------------------------------------------------------------------------------------------------------

பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும்

கதறலாகவே நாம் கேட்கவேண்டும்.

இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும்

வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.
நமது நட்பின் லிங்க்

-----------------------------------------------------------------------------------

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன்

என்னைப் பார்க்க வந்தார்.
வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன்.
காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின்
ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கொடூரமானது
என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

மேலும் வாசிக்க....நமது அன்பு நண்பரின் லிங்கில்


http://karurkirukkan.blogspot.com/2011/08/blog-post_3499.html

------------------------------------------------------------------------------------------


Don't Cry Baby...Don't Cry...

Don't Cry Baby...Don't Cry...:


























































Thailand National Park - Awesome Photos...

Thailand National Park - Awesome Photos...: