வியாழன், 15 செப்டம்பர், 2011

தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்

தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்:





மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.



கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.

கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.



தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.


1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.


2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.


3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.


4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்�AF�து அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற௕ள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.

இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.

எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.



மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.

மேலும்

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

சாகும் வரை உண்ணாவிரதம் day-4:
அன்பு நண்பர்களே,

தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் .

இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது .


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் படங்கள் கீழே .





ஆதரவளித்து வரும் பதிவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி .

பாரதியின் அரிய புகைப்படங்கள்!

பாரதியின் அரிய புகைப்படங்கள்!: காலையில் வழக்கம் போல் பஸ்ஸில் கும்மிக்கிட்டு இருக்கும் பொழுது பாரதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன் பார்த்ததும்

"பாபா ராம்தேவ் மாதிரி இருக்காரு பாரதி...ஆனா போட்டோவில் எல்லாம் வேற மாதிரி இருக்காரே போட்டோஷாப்பில் தாடியை எல்லாம் ட்ரிம் செஞ்சி...மீசைய எல்லாம் முறுக்கிவுட்டு வரலாறு முக்கியம் அமைச்சரே எனப்து போல் போட்டோவை ரிலீஸ் செஞ்சது யாரு? " என்று பஸ் விட்டேன்.

அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் ஹரி கிருஷ்ணன் புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்தது மட்டுமின்றி...அரிய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார்.


அனுப்பிய ஹரி கிருஷ்ணனுக்கும் நன்றி.

‘நன்றி, ‘சித்திர பாரதி’ தொகுத்தவர் திரு ஆர் ஏ பத்மநாபன்’










சனி, 3 செப்டம்பர், 2011

உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.

உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.:
முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'உயிரினும் இனிய பெண்மை' மருத்துவ பதிவிற்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி. இது தொடர்பாக சில கேள்விகள் வந்திருந்தன. அவற்றில் தனிப்பட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் தந்துவிட்டேன். பொதுவான சில கேள்விகளுக்கான பதில்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவை...
1. இது பயப்படவேண்டிய மனோ வியாதியா? இது பயப்படவேண்டிய வியாதியல்ல. கவனிக்க வேண்டிய வியாதி. மேலும் இது நிரந்தரமானது அல்ல. ஹார்மோன் அளவு சீரானபின் சரியாகிவிடுவார்கள். இடைப்பட்ட காலத்திற்குள் நாம் கவனமாக பார்த்துக்கொண்டால் போதும். 2. நான் தனிமையிலிருக்கும் தாய்மையடைந்த பெண். இது போன்ற பிரச்சினையை உணர்ந்து சீர் செய்ய என்ன வழி?

நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் எனில் சில குறிப்புகளை உணருங்கள். சோகம், கோபம், எரிச்சல், சோர்வு, சந்தேகம் போன்ற உணர்வுகள் உங்களை அலைக்கலைத்தால் போஸ்ட்போர்டம் அழுத்தம் இருக்கலாம். இது போன்ற உணர்வுகள் சாதாரணமான பெண்களுக்கும் வரலாம். ஆனால் எல்லை மீறி வெளிப்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஏதோ தவறு நடக்கிறது என்பதையும் கட்டுபடுத்த முடியாத இயலாமையையும் நீங்களே உணர்வீர்கள். பிரசவத்திற்கு பிறகான மாதசுழற்சியை கவனியுங்கள். மாதவிடாய் போக்கின் அளவும் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.


- உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் இது பற்றி லந்தாலோசிக்கலாம். கணவர், தோழி, சகோதரி போன்றவர்கள். இவர்கள் உங்களுடைய மாற்றத்தை சரியாக எடைபோட்டுவிடுவார்கள்.
-குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்தவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளுங்கள். வயதான பெரியவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனையை கேளுங்கள்.
- உங்களை அலைக்கலைக்கும் சிந்தனைகளை உடனேயே ஆக்ரோசமாக வெளிப்படுத்தாமல், ஒரு சிறிய நோட்டில் குறித்து வையுங்கள். உணர்வுகளின் பிடியிலிருந்து தற்காலிகமாக நீங்கள் வெளிவரும்போதெல்லாம் - நார்மல் ஆக இருக்கும் சமயங்களில் - அதனை வாசித்துப் பாருங்கள். தேவையில்லாத குப்பைகளை ஒதுக்கித் தள்ளும் பக்குவம் நாளடைவில் கிட்டிவிடும்.
- தியானம் செய்வது, தெய்வ காரியங்களில் ஈடுபடுவது ஒரு சிந்தனை மாற்றத்தைத் தரும்.

- தனித்து இருந்தாலும் பாலைவனத்தில் இல்லையல்லவா, உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்கள் இது போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். - மருத்துவரை அணுகுங்கள் - அவர் மகப்பேறு மருத்துவராக இருப்பது நல்லது. அவர் போதுமான கவுன்சிலிங் தருவார். தன்னிச்சையாக மனபதட்டத்தை குறைக்கும் மருந்துகளையும், ஹார்மோன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் -மருத்துவர் கூறினால்கூட ஹார்மோன் மருந்துகளை தவிர்க்கவும். பிற்பாடு பிரச்சினை எழலாம். - புதிதாக தாயாகும் பெண்களுக்கே உரிய ஒரு தவறான சிந்தனையை விலக்குங்கள். அது என்னவென்றால், 'நான் ஒரு சிறப்பான தாயாக இருப்பேன். என் குழந்தையை மிக சிறப்பாக வளர்ப்பேன்' என்பதுதான். ஏனெனில் இந்த சிந்தனை அனுபவமிக்க மற்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளத் தூண்டும். மற்றவர்களை குறை சொல்லத் தூண்டும். 3. இதற்கான கைவைத்தியம், பத்திய உணவு பற்றி தெரிவியுங்கள்:

பொதுவாகவே உங்கள் மருத்துவர் சொல்லும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாயுத் தொல்லை உள்ள வகைகள் - கிழங்கு வகைகள், பட்டாணி, சோயா போன்றவற்றை தவிர்த்திடுங்கள். எளிதில் சீரணிக்ககூடியவற்றை உண்ணுங்கள். தாய்ப்பால் தருவர்கள் எனில் இவை குழந்தையின் உடல் நிலையை பாதிக்கும்.. அதுவும் கூடுதலாக கவலைப்படவைக்கும். சூப் வகைகள், குறிப்பிட்ட மீன் வகைகள் மிக நல்லது.


ஹார்மோன் குறைபாட்டினை சரிசெய்ய வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். களி செய்யும் முறை.
இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்திற்கு, மூன்று பங்கு அரிசி சேர்த்து ஊறவையுங்கள். நன்றாக நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள். மாவு நிறம் மாறி வெந்த அடையாளம் தெரியும். நீரில் கைவத்து களியினை தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இந்த பதத்தில் இறக்கிவிடுங்கள். ஒரு தட்டில் பரப்பி நடுவில் சிறு குழி செய்து கொண்டு அதில் நல்லெண்னையும், பனை வெல்ல பாகு( சூடான கரைசலாக இருந்தாலே போதும்) ஊற்றி மிதமான சூட்டில் ஸ்பூனில் எடுத்து சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சற்று கசக்கும் தேவையென்றால் பனைவெல்லப்பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கருப்பையை உறுதிபடுத்தும், ஈஸ்ட்ரோஜனை நிலைப்படுத்தும், வயிற்றுக் கோளாறுகளை போக்கும், பனைவெல்லம் சேர்ப்பதால் குளிர்ச்சியும், இரத்தஓட்டம் சீராகுதலும் கூடுதல் நன்மைகளாக கிட்டும்.

உடலும் உள்ளமும் உறுதிபட்டுவிட்டால், நாளை இது போன்றவர்களுக்கு நாம் வழிக்காட்டியாக இருக்கலாமல்லவா? மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.



செல்வந்தர்களே.... கேளுங்கள்!!!

செல்வந்தர்களே.... கேளுங்கள்!!!:

செல்வந்தர் யார்?

செல்வம் நிறைந்தவரெல்லாம் செல்வந்தராகமுடியாது!

நல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்!



காலந்தோறும் செல்வம்.



1. குழந்தைச் செல்வம்!

2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

3. கல்வியே அழியாத செல்வம்!

4. ஆடு, மாடுகளே செல்வம்!

5. நிலங்களே செல்வம்!

6. பணம் தான் செல்வம்!


என காலந்தோறும் செல்வத்தின் மதிப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது.



ஆசை.

வாழ்ககையி்ல் பொருட் செல்வம் கிடைக்காதவர்கள், செல்வத்தின் மீது ஆசை கொண்டவர்கள் தம் பி்ள்ளைகளுக்கு பெயரிலாவது செல்வம் இருக்கட்டுமே என்று...

செல்வம், அருள் செல்வம்,அன்புச் செல்வம், அறிவுச் செல்வம், ஞானச் செல்வம், செல்வமுரளி, செல்வ கணபதி, செல்வி என்றெல்லாம் பெயர் வைப்பதை வழக்கில் காணமுடிகிறது.



செல்வத்தை எங்கு மறைத்து வைப்பீர்கள்..?



இன்றைய சூழலில் ஊடகங்களில் கேட்கும் தினசரி செய்திகளுள்,

அலைக்கற்றை மோசடி,கறுப்புப் பணம், இலஞ்சம், ஊழல், சுவிசு வங்கி, லோக்பால், போராட்டம், பத்மநாதசாமி, சாய்பாபா என்பன குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இந்த செய்திகளுக்கான தலைப்புகள் பலவகைப்பட்டிருந்தாலும், பொருள் ஒன்றுதான்....

“செல்வத்தை மறைத்தல்“ என்பதுதான் அது.

அட மூடர்களே செல்வத்தை எங்கே மறைப்பீர்கள்..?

முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே முடியுமா..??



சரி மறைத்தாலும் உங்க உடல் மறைந்தபின் அதை உங்களால் எடுத்தச் செல்ல இயலுமா..??



சங்க இலக்கியத்தில் ஒரு அகப்பாடல்.....



தலைவன், தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழி தலைவனிடம் வாழ்வியல் நீதிகளை எடுத்துரைத்துத் தலைவியைத் தலைவன் மணம் செய்து கொள்ளத் தூண்டுகிறாள். இதுவே பாடலுக்கான களம்.



நெய்தல் நிலப் போர்களம்!



கடற்கறையில் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகளே யானைப் படையாக!

அலைகளின் ஒலியே போரில் முழக்கப்படும் பறையொலியாக!

மீன்களுக்காகத் தவமிருக்கும் பறவை இனங்களே படையாகவும் கொண்டு அரசன் பகைவன் மேல் போர்தொடுத்து செல்லுவதைப் போல் வலிய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே!!



நன்றி மறந்தவன் செல்வம்!



தனக்குக் கற்பித்த ஆசிரியன் துன்பப்படும் சூழலில் அவருக்குத் தன் கைப்பொருளைக் கொடுத்து உதவாதவனுடைய செல்வம்...?



நெறிமுறை மறந்தவன் செல்வம்!



தான் கற்ற வி்த்தையைத் தவறான வழியில் பயன்படுத்தியவனுடைய செல்வம்...?



உதவியை மறந்தவன் செல்வம்!



தான் துன்புற்றபோது தனக்கு உதவி செய்தவர் தாம் துன்புறும் போது உதவாதவனுடைய செல்வம்....?



ஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்து போகக் கூடியவை. அதுமட்டுமின்றி செய்நன்றி மறந்தவர் உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் தாம் செய்த தவறுக்கான துன்பத்தை எவ்வழியிலாவது அடைவது உறுதி!!



உறவுகளை வருத்தும் செல்வம்!



உறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள் எல்லாம் முயற்சியில்லாத மன்னனின் குடிகள் எவ்வாறு அழியுமோ அதுபோல அழிந்துபோகும்.



வாக்குத் தவறியவன்!



கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் தானாகவே தேய்ந்துபோவான். பொய்த்த இந்தத் தீவினையானது மறுபிறப்பிலும் வாளைப்போலக் கூர்மையாக அவனை அழிக்காமல் விடாது.



ஒப்பிட்டுத் தன்மதிப்பீடு செய்துகொள்.



தலைவ..

செய்நன்றிக் கேடும், வாக்குத் தவறுதலும் எத்தகைய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இதுவரை நான் சொன்னதிலிருந்து உன்னால் உணரமுடிகிறதா..? களவுக்காலத்தில் தலைவியைக் காண நீ என்ன பாடுபட்டாய் ? அந்த நன்றியை மறக்கலாமா? தலைவியை விரைவில் மணப்பேன் என்ற வாக்குத் தவறுதல் சரியா..?



வரைவு கடாவுதல்.




தன் பகை வேந்தனோடு சினந்த அரசன், பகை வேந்தன் தம் கோட்டையை முற்றுகையிட்டபோது எத்தகைய வருத்தம் கொள்வானோ அதுபோலத் தலைவியும் உன் வரைவுக்காக் (திருமணம்) காத்திருக்கிறாள். அதனால் விரைந்து தலைவியை மணப்பாய் தலைவ! என்கிறாள் தோழி.



பாடல் இதோ..



நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,

கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,

அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்

தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், 5

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்

எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்

தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,


சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் 10

வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;

ஆங்கு

அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:

சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த

வினை வரு பருவரல் போல, 15

துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.



கலித்தொகை -149.

வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு காடாயது.



பாடல் வழியே..



1. ஒரு அகப்பாடலில் தலைவனின் நிலப்பகுதியைச் சொல்லவந்த தலைவி கடலே போர்க்களமாக, படகுகளே யானைப்படையாக, அலையே பறையாக, பறவையினங்களே படையாகக் கற்பனை செய்து காட்சிப்படுத்தியமை இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்க்கைக்குச் சான்றாகத் திகழ்கிறது.



2. செய்நன்றி மறத்தல், வாக்குத் தவறுதல் உள்ளிட்ட தவறுகளைச் சுட்டி தலைவனை உணரவைக்க எண்ணிய தோழி சொல்லும் பல்வேறு நீதிகருத்துக்கள், இன்றும் நம் வாழ்வி்ல் பின்பற்றத் தக்கனவாகவே உள்ளன.



3. செல்வம் நிலையில்லாதது, அழிந்துபோகக்கூடியது, மறைத்து வைக்கமுடியாதது என்ற தோழியின் கூற்று ஒவ்வொருவரும் தம் வாழ்வில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !:
ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .


இதனிடையே தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .

கூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .
தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.

அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்பாவு அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப் படுத்தப் படவில்லை .


இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியுள்ளது .

இது சம்மந்தமாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது .உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது .

தங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...

தங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...:

நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். "பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

இந்தியாவில், நடுத்தரக் குடும்பங்களில் கூட, 10 சவரன் நகை இல்லாமல், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது. கந்து வட்டி கடனில் தான், பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. இதற்காக நிலங்களும், வீடுகளும் அடமானம் வைக்கப்பட்டு, பின், வட்டி கட்ட முடியாமல், அவை மூழ்கிப்போகின்றன.

தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். வல்லரசு நாடுகளின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப, தங்கத்தின் விலை ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டங்களிலிருந்து, நாம் விலகி நிற்பதே, விவேகமான செயல். தங்க நகைகள், முதலீடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் சொத்தாக கருதப்படுகிறது.

இந்த காரணங்களுக்காக, பெற்றோர், திருமணத்தின் போது, தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது.

நெருக்கடி தருணங்களில் இவைகளின் மீது, குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.விண்ணுக்கு விலை செல்லும் தங்கத்தை துரத்துவதை விட்டு விட்டு, நம் பொருளாதார சக்திக்குட்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவது தான், நடுத்தர வர்க்கத்துக்கு நல்லது.
இம்மாதிரி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!

நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?

நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?:
அன்னா ஹஸாரேவை யாரெல்லாம் திட்டி தீர்க்க தயாராக இருக்கிறார்களோ - அவர்கள் எடுக்கும் வாந்தியை - அப்படியே அள்ள தயாராக இருக்கிறார்கள் சிலர். அந்த பட்டியலில் பகுத்தறிவு ஏடு விடுதலையும் உள்ளது போலும். "ஊழலை எதிர்க்கவும் மாட்டோம். ஊழல் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்க விட மாட்டோம்" என்பது தான் அவர்களின் சீரிய கொள்கை. ஸ்பெக்டரம் ஊழல் முறைகேடு புரிந்தவர்கள், நில அபகரிப்பு வேலை செய்தவர்களின் பங்காளிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

அய்யா கி.வீரமணியின் விடுதலை ஏட்டிற்கு நாளும் ஒருவர் அன்னா ஹஸாரேவை விமர்சிக்கும் செய்தியை வெளியீட்டாக வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. அந்த வகையில் - அன்று யாரும் அன்னா ஹஸாரேயை திட்டவில்லை போலும். ஆனாலும் விடுமா விடுதலை ஏடு. தேடி பிடித்து கவர்ச்சி புயல், கலைஞரின் மானாட மயிலாட புகழ் நமீதாவின் பேச்சை படம் பிடித்து போட்டு புண்ணியம் தேடி கொண்டது.

பெரும்பாலும் விடுதலை ஏட்டின் எந்த செய்திக்கும் கருத்துரை வராது. ஆனால் நமீதா பேச்சு என்றதும் இரண்டு கருத்துரை. இதை தான் விரும்பினார்கள் போலும். திராவிட கழகத்தின் குட்டியும், இந்தி எதிர்ப்பு பீரங்கியுமான திராவிட முன்னேற்ற கழகம் - இந்தி குஷ்பூவை வைத்து திராவிடத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டு பதினாறடி பாயும் போது, தாய் கழகமான திராவிட கழகம் எட்டடியாவது பாய்ந்தால் தானே மரியாதையாக, பெருமையாக இருக்கும்.

அந்த வகையில் கருஞ்சட்டைகளின் ஏடு விடுதலை - அன்னா ஹசாரேவை பற்றி கருத்து தெரிவிக்க இந்தி நமீதாவை குஜராத்திலிருந்து அழைத்துள்ளது. அய்யா பெரியார் சொன்னார். "தமிழகத்தை பிடித்த தரித்திரத்தில் சினிமாவும் ஒன்று" என்று. ஆனால் அதெல்லாம் பேச்சளவில் தான். கழகங்கள் சாவகாசமாக அதை மறந்து விடும். புத்திமதி அடுத்த கட்சிக்காரர்களுக்கு தான். திராவிட கழகங்களுக்கு அல்ல.பகுத்தறிவுகளின் உலகளாவிய சிந்தனைகளை வெளிப்படுத்த - கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விட ஹாலிவுட் நட்சத்திரங்கள் தானே சரியாக இருக்கும்.


அவ்வப்போது திரைக்கலைஞர்களை காக்கா பிடிப்பதற்கு, தேர்தல் நேரத்தில் பயன் படுத்தி கொள்வதற்கு - திராவிட கழகங்கள் என்றும் தவறியதோ, தயங்கியதோ இல்லை. இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு "விஜய்காந்த்" மட்டுமே சினிமாகாரர். "அன்னா ஹஸாரேக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்டார்கள் கருஞ்சட்டையாளர்கள். அவர்களிடம் மக்கள் திருப்பி கேட்கிறார்கள். "அன்னா ஹஸாரேயை பற்றி பேச நமீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேறு ஆளே கிடைக்கவில்லையா" என்று. அதில் நியாயமிருக்கிறது தானே.

எந்த சினிமா கலைஞர்களாவது - பொது பிரச்சனைக்கு வாய் திறந்தாலும் "என்ன தகுதி உள்ளது அவர்களுக்கு" என்று கேட்க தயங்குவதே இல்லை பகுத்தறிவு. நமீதாவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தார்களா? "மாமன்ஸ், மச்சான்ஸ்" என்று நமீதா கெஞ்சலுடன் பேசுவதில் ஈர்க்கப் பட்டுவிட்டார்களோ என்னவோ. நமீதா பேசிய பேச்சை பார்ப்போம். "அன்னாஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை "என்று பெரிய தீர்க்கதர்சி போல கண்டு பிடித்து சொன்னதை தான் விடுதலை ஏடு பெருமையாக பிரசுரித்து உள்ளது... மேலும் நமீதா சொல்கிறார்.."

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. " இப்படியே சொல்லி கொண்டிருந்தால் ஊழல் பூனைக்கு மணி கட்டுவது யாரம்மா?

மேலும் சொல்கிறார். "அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது." என்று. அன்னா ஹஸாரே என்ன சினிமா நடிகையா இல்லை சாமியாரா இல்லை அரசியல்வாதியா? பரபரப்பு செய்திக்கும், கிளுகிளுப்பு செய்திக்கும் அடி போட... அப்படி பார்த்தால் - நாளும் ஒரு போராட்டம் நடத்தும் பகுத்தறிவாளர்கள் பரபரப்புக்கு தான் போராட்டம் நடத்துகிறார்களா.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களை பார்த்து பகுத்தறிவு இப்படி கேள்வி கேட்கிறது. "ஊதியமாக கருப்பு பாதி, வெளுப்பு பாதி என்று வாங்குபவர்கள் தான் ஊழல் எதிர்ப்பாளர்களா" என்று. பொதுமக்கள் நமீதா போன்ற நடிகைகளை பார்த்து - உண்மையான பகுத்தறிவுடன் இப்படி கேட்கிறார்கள் "கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி என்று ஊதியம் வாங்கும் நட்சத்திரங்கள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை விமர்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே" என்று.

கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி வாங்கும் நட்சத்திரங்களுக்கு அன்னா ஹஸாரே பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. பகுத்தறிவுக்கும் பிடிக்காமல் போனதில் தான் ஆச்சரியம். ஊழல் எதிர்ப்புக்கும் ஆயிரம் உள் நோக்கம், வெளி நோக்கம் கற்பிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

தமக்கு பிடிக்காதவர்களை விமர்சிக்க - யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கருத்துக்களை வாங்கி போடுவார்கள் போலும். மற்றவர்களின் தகுதி பற்றி பேசுபவர்கள் - எப்போதும் தங்களின் தகுதி பற்றி மறந்து தான் போகிறார்கள்.ஊழலை ஒழிக்க "முடியாது, கஷ்டம், ஆகாது" என்று சொன்னால் அது பகுத்தறிவா? ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கும் சாதியையே ஒழிக்க முடியும் என்று நம்பும் போது, அரசியல்வியாதிகளின் ஊழலை ஒழிப்பதா கஷ்டம். சிந்திக்க வேண்டாமா?

நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?

நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?:
அன்னா ஹஸாரேவை யாரெல்லாம் திட்டி தீர்க்க தயாராக இருக்கிறார்களோ - அவர்கள் எடுக்கும் வாந்தியை - அப்படியே அள்ள தயாராக இருக்கிறார்கள் சிலர். அந்த பட்டியலில் பகுத்தறிவு ஏடு விடுதலையும் உள்ளது போலும். "ஊழலை எதிர்க்கவும் மாட்டோம். ஊழல் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்க விட மாட்டோம்" என்பது தான் அவர்களின் சீரிய கொள்கை. ஸ்பெக்டரம் ஊழல் முறைகேடு புரிந்தவர்கள், நில அபகரிப்பு வேலை செய்தவர்களின் பங்காளிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

அய்யா கி.வீரமணியின் விடுதலை ஏட்டிற்கு நாளும் ஒருவர் அன்னா ஹஸாரேவை விமர்சிக்கும் செய்தியை வெளியீட்டாக வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. அந்த வகையில் - அன்று யாரும் அன்னா ஹஸாரேயை திட்டவில்லை போலும். ஆனாலும் விடுமா விடுதலை ஏடு. தேடி பிடித்து கவர்ச்சி புயல், கலைஞரின் மானாட மயிலாட புகழ் நமீதாவின் பேச்சை படம் பிடித்து போட்டு புண்ணியம் தேடி கொண்டது.

பெரும்பாலும் விடுதலை ஏட்டின் எந்த செய்திக்கும் கருத்துரை வராது. ஆனால் நமீதா பேச்சு என்றதும் இரண்டு கருத்துரை. இதை தான் விரும்பினார்கள் போலும். திராவிட கழகத்தின் குட்டியும், இந்தி எதிர்ப்பு பீரங்கியுமான திராவிட முன்னேற்ற கழகம் - இந்தி குஷ்பூவை வைத்து திராவிடத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டு பதினாறடி பாயும் போது, தாய் கழகமான திராவிட கழகம் எட்டடியாவது பாய்ந்தால் தானே மரியாதையாக, பெருமையாக இருக்கும்.

அந்த வகையில் கருஞ்சட்டைகளின் ஏடு விடுதலை - அன்னா ஹசாரேவை பற்றி கருத்து தெரிவிக்க இந்தி நமீதாவை குஜராத்திலிருந்து அழைத்துள்ளது. அய்யா பெரியார் சொன்னார். "தமிழகத்தை பிடித்த தரித்திரத்தில் சினிமாவும் ஒன்று" என்று. ஆனால் அதெல்லாம் பேச்சளவில் தான். கழகங்கள் சாவகாசமாக அதை மறந்து விடும். புத்திமதி அடுத்த கட்சிக்காரர்களுக்கு தான். திராவிட கழகங்களுக்கு அல்ல.பகுத்தறிவுகளின் உலகளாவிய சிந்தனைகளை வெளிப்படுத்த - கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விட ஹாலிவுட் நட்சத்திரங்கள் தானே சரியாக இருக்கும்.


அவ்வப்போது திரைக்கலைஞர்களை காக்கா பிடிப்பதற்கு, தேர்தல் நேரத்தில் பயன் படுத்தி கொள்வதற்கு - திராவிட கழகங்கள் என்றும் தவறியதோ, தயங்கியதோ இல்லை. இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு "விஜய்காந்த்" மட்டுமே சினிமாகாரர். "அன்னா ஹஸாரேக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்டார்கள் கருஞ்சட்டையாளர்கள். அவர்களிடம் மக்கள் திருப்பி கேட்கிறார்கள். "அன்னா ஹஸாரேயை பற்றி பேச நமீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேறு ஆளே கிடைக்கவில்லையா" என்று. அதில் நியாயமிருக்கிறது தானே.

எந்த சினிமா கலைஞர்களாவது - பொது பிரச்சனைக்கு வாய் திறந்தாலும் "என்ன தகுதி உள்ளது அவர்களுக்கு" என்று கேட்க தயங்குவதே இல்லை பகுத்தறிவு. நமீதாவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தார்களா? "மாமன்ஸ், மச்சான்ஸ்" என்று நமீதா கெஞ்சலுடன் பேசுவதில் ஈர்க்கப் பட்டுவிட்டார்களோ என்னவோ. நமீதா பேசிய பேச்சை பார்ப்போம். "அன்னாஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை "என்று பெரிய தீர்க்கதர்சி போல கண்டு பிடித்து சொன்னதை தான் விடுதலை ஏடு பெருமையாக பிரசுரித்து உள்ளது... மேலும் நமீதா சொல்கிறார்.."

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. " இப்படியே சொல்லி கொண்டிருந்தால் ஊழல் பூனைக்கு மணி கட்டுவது யாரம்மா?

மேலும் சொல்கிறார். "அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது." என்று. அன்னா ஹஸாரே என்ன சினிமா நடிகையா இல்லை சாமியாரா இல்லை அரசியல்வாதியா? பரபரப்பு செய்திக்கும், கிளுகிளுப்பு செய்திக்கும் அடி போட... அப்படி பார்த்தால் - நாளும் ஒரு போராட்டம் நடத்தும் பகுத்தறிவாளர்கள் பரபரப்புக்கு தான் போராட்டம் நடத்துகிறார்களா.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களை பார்த்து பகுத்தறிவு இப்படி கேள்வி கேட்கிறது. "ஊதியமாக கருப்பு பாதி, வெளுப்பு பாதி என்று வாங்குபவர்கள் தான் ஊழல் எதிர்ப்பாளர்களா" என்று. பொதுமக்கள் நமீதா போன்ற நடிகைகளை பார்த்து - உண்மையான பகுத்தறிவுடன் இப்படி கேட்கிறார்கள் "கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி என்று ஊதியம் வாங்கும் நட்சத்திரங்கள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை விமர்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே" என்று.

கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி வாங்கும் நட்சத்திரங்களுக்கு அன்னா ஹஸாரே பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. பகுத்தறிவுக்கும் பிடிக்காமல் போனதில் தான் ஆச்சரியம். ஊழல் எதிர்ப்புக்கும் ஆயிரம் உள் நோக்கம், வெளி நோக்கம் கற்பிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

தமக்கு பிடிக்காதவர்களை விமர்சிக்க - யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கருத்துக்களை வாங்கி போடுவார்கள் போலும். மற்றவர்களின் தகுதி பற்றி பேசுபவர்கள் - எப்போதும் தங்களின் தகுதி பற்றி மறந்து தான் போகிறார்கள்.ஊழலை ஒழிக்க "முடியாது, கஷ்டம், ஆகாது" என்று சொன்னால் அது பகுத்தறிவா? ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கும் சாதியையே ஒழிக்க முடியும் என்று நம்பும் போது, அரசியல்வியாதிகளின் ஊழலை ஒழிப்பதா கஷ்டம். சிந்திக்க வேண்டாமா?

நான் ரொம்ம்மம்ம்ம்ப பிசியாக்கும் என்று உங்களை நினைக்க வேண்டுமா? சில யோசனைகள்.

நான் ரொம்ம்மம்ம்ம்ப பிசியாக்கும் என்று உங்களை நினைக்க வேண்டுமா? சில யோசனைகள்.:
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு பைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.



2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.



3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை

உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.



4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.கூடவே

நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.



6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.



7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.



8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.



9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்

பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.



11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.



12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச

நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்

போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.



13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.



14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.



15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.

மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.



17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.



18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்





பின்குறிப்பு : எனக்கு மெயிலில் வந்ததை உங்கள் பார்வைக்கு கொடுக்கின்றேன் .

இந்த மெயிலை எனக்கு அனுப்பினது யாரு?

இந்த மெயிலை எனக்கு அனுப்பினது யாரு?:
பெயர் காரணங்கள்.




Doctor -- வைத்யநாதன்

Dentist -- பல்லவன்

Lawyer -- கேசவன்

North Indian Lawyer -- பஞ்சாபகேசன்

Financier -- தனசேகரன்

Cardiologist -- இருதயராஜ்

Pediatrist -- குழந்தைசாமி

Psychiatrist -- மனோ

Marriage Counselor -- கல்யாணசுந்தரம்

Ophthalmologist --கண்ணாயிரம்

ENT Specialist -- நீலகண்டன்

Diabetologist -- சக்கரபாணி

Nutritionist -- ஆரோஞசாமி

Hypnotist -- சொக்கலிங்கம்

Mentalist -- புதிசிகாமணி

Exorcist -- மாத்ருபூதம்

Magician -- மாயாண்டி

Builder -- செங்கல்வராயன்

Painter -- சித்ரகுப்தன்

Meteorologist -- கார்மேகம்

Agriculturist -- பச்சையப்பன்

Horticulturist -- புஷ்பவனம்

Landscaper -- பூமிநாதன்

Barber -- கொண்டியாப்பன்

Beggar -- பிச்சை

Bartender -- மதுசுதன்

Alcoholic -- கள்ளபிரான்

Exhibitionist -- அம்பலவாணன்

Fiction writer -- நாவலன்

Makeup Man -- சிங்காரம்

Milk Man -- பால் ராஜ்

Dairy Farmer -- பசுபதி

Dog Groomer -- நாயகன்

Snake Charmer -- நாகமுர்த்தி

Mountain Climber -- ஏழுமலை

Javelin Thrower -- வேலாயுதம்

Polevaulter -- தாண்டவராயன்

Weight Lifter -- பலராமன்

Sumo Wrestler -- குண்டு ராவ்

Karate Expert -- கைலாசம்

Kick Boxer -- எத்திராஜ்

Batsman -- Dhandiappan

Bowler -- Balaji

Spin Bowler -- Thirupathi

Female Spin Bowler -- Bala Thirupura Sundari

Driver -- Sarathy

Attentive Driver -- Parthasarathy

Flutist -- Muralidhara

வியாழன், 1 செப்டம்பர், 2011

கிறிஸ்தவ முஸ்லிம் வலைத் தீவிரவாதிகள் – 5

கிறிஸ்தவ முஸ்லிம் வலைத் தீவிரவாதிகள் – 5:

இந்த பதிவு தொடர்பான முந்தைய நான்கு பதிவுகள்.


ஒன்று


இரண்டு


மூன்று


நான்கு


போலி மதச்சார்பின்மை. வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு. இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே. இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம். பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம். இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும். இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது. இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!


பகுத்தறிவாளர்களில் கடவுளே கிடையாது, தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பிதற்றும் திராவிட வியாதிகள், பெரியார் வியாதிகள் உண்டு. இந்த வியாதிகள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒரு நம்பிக்கைக் குறை அவ்வளவுதான். ஆனால் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த பகுத்தறிவாளர் போர்வையில் ஒளிந்திருப்பார்கள் பாருங்கள், பேச்செல்லாம் விடம். இவர்களுக்கு மதத்தைப் பற்றியும் கிறித்துவ மதத்தைப் பற்றியும் பேசினால் மட்டும் பகுத்தறிவு வேலை செய்யாது. எங்கள் மதம், எங்கள் மார்க்கம், எங்கள் மத நியதி, ஏக இறைவன் என்றெல்லாம் பேசுவார்கள். இந்துக்கள் எதிர்வாதம் புரியும் போது, இந்துமத சம்பிரதாயங்களைக் காட்டி அது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்று உளறுவார்கள். குரானில் சொல்லியிருக்கிறது, பைபிளில் இருக்கிறது என்று அவர்களின் மதச்சார்புடைய வலைச்சுட்டிகளைப் பட்டியல் இடுவார்கள்.


இந்த சுட்டிகளைக் காட்டும் வேலை ஒன்றும் புதிதில்லை. “ஏசு அழைக்கிறார், பரிசுத்த ஆவியின் பூப்புனித நீராட்டு விழா, விசேஷித்த வேதபாடக் கூச்சல்கள்” என்று சந்து பொந்தெல்லாம் துண்டுப் பிரசுரம் நீட்டும் அல்லேலுயா கும்பல்களின் வேலை போன்றதொரு மதமாற்ற பிரச்சாரம்தான் இவையெல்லாம். மூத்திர சந்து முனைகளில் துண்டுப் பிரசுரங்களை நீட்டிய காலம் மலையேறி, இணையத்தின் சந்து பொந்துகளில் மத மாற்றக் கொக்கி போடுகிறார்கள். இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ‘அன்பொழுக’ அழைப்பார்கள். எங்கள் இஸ்லாமில் சாதி பேதம் கிடையாது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டிகளைப்பாருங்கள் என்று இணைய தள சுட்டிகளை பட்டியல் இடுவார்கள். போங்கடா டேய்! இஸ்லாமில் இல்லாத பிரிவினைகளா? பிரிவினை என்றாலே இஸ்லாம் தானே.


இன்னொரு முக்கிய விடயம், சில தமிழ் வலைக்குழுமங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இன்றி சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட அது மட்டுறுத்தப்பட்டு விடும், வெளிவராது. கேட்டால் “வீண் விவாதங்களைத் தவிர்க்க, மதப் பிரச்சினைகளைத் தவிர்க்க, நண்பர்களுக்குள் மத துவேஷம் கூடாது” என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். இவைதான் காரணம் எனில் மத ரீதியான இடுகைகள் எதையுமே அனுமதிக்காமல் இருக்கலாமே? அப்படிச் செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது. செய்தால் குழுமத்தில் ஈயாடும். குழுமங்களில் கும்மி அடிக்க இவர்களுக்கு கிடைத்த விடயம் இந்து மதம் தான். இந்து மதத்தையும் பிராமணர்களையும் பகடைக்காய்களாக்கி விளையாடுவதே இந்த வலைத்தீவிரவாதிகளின் விளையாட்டு. அதில் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது பகுத்தறிவு என்னும் மூட மதி மயக்கத்திலிருக்கும் இந்துக்கள் தான்.


அறிவு என்பதே நல்லது எது தீயது எது? எது சரி எது தவறு, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று ஆய்ந்து நல்லதை, சரியானதை தேர்ந்தெடுக்கும் மனிதனின் மனப்பாங்கு, அவ்வளவு தான். அப்புறம் என்ன மண்ணாங்கட்டி பகுத்தறிவு? உண்மையில் பகுத்தறிவும் கிடையாது ஒரு மசிரும் கிடையாது. யாரோ பிராமணர்களால் வஞ்சிக்கப்பட்ட ஒருவர் தனது கருத்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் உளறி விட்டுப் போய் விட்டார். அவருக்கு பிடிக்காத ஒரு விடயத்தை அவருக்கு பிடிக்காது என்ற காரணத்தால் உரக்கச் சொன்னார். அவரது நேரமும் நன்றாக இருந்தது, ஊரெங்கும் கேட்டது. நம் மக்களைப் பற்றித்தான் தெரியுமே….. அவருக்கு அடிவருட ஆரம்பித்து விட்டார்கள். பார்ப்பனருக்கு அடிவருடாதீர்கள் என்ற பேச்சில் மயங்கி திராவிட வியாதிகளுக்கு அடிவருடிக் கொண்டிருக்கிறார்கள்.



Filed under: வலைத்தீவிரவாதிகள்